தகவலை அணுகுவதற்கான நடைமுறை
சட்டம் - தகவல் அறியும் உரிமை சட்டம் இலக்கம் 12 இன் 2016
கட்டளைகள் - 2017பெப்ரவரி 3ம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை 2004/66
பொது அதிகாரம் - உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் அத்துடன் இணைந்த நிறுவனங்கள்
மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பான தகவல்களைப் பெறும் பொருட்டு RTI1 இலக்க விண்ணப்பப்படிவத்தை பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலரிடம் அதிகாரியிடம் தகவல்களைக் கோர முடியும். இந்த விண்ணப்பத்தின் சமர்ப்பிப்பு கட்டயாமில்லை.
தகவல் அதிகாரி
திருமதி. W.M.N.Y.R. Wijethunga
Assistant Divisional Secretary
தொலைபேசி : +94 662 226 800
தொலைநகல் : +94 662 055 087
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- தகவல் அறிவதற்காக எழுத்துமூலம், RTI1 எனும் விண்ணப்பப்படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலரிடம் சமர்ப்பித்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும்.
- இயலுமானவரை விரைவாகவும், பதினான்கு நாட்களுக்குள் நீங்கள் கோரிய தகவல்களை வழங்க முடியுமா / வழங்க முடியாதா என்பது உங்களுக்கு அறிவிக்கப்படும்
- கோரப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவாக கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு பதினான்கு நாட்களுக்குள் வழங்கப்படும்.
- கட்டணம் செலுத்திய பின்னர் பதினான்கு நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசெளகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு இருபத்தொரு நாட்களை விட அதிகரிக்காத மேலதிக கால எல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
- தகவலுக்கான வேண்டுகோள் பிரஜையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பற்றியது எனில், அந்தக் கோரிக்கை கிடைத்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள் பதில் அளிக்கப்படும்.
- தகவலுக்கான உங்கள் வேண்டுகோளுக்கு நீங்கள் பெறும் பின்வரும் பதில்கள் தொடர்பாக திருப்தியடையவில்லை என்றால், தயவுசெய்து பதினான்கு நாட்களுக்குள் பின்வரும் அதிகாரியிடம் மேன்முறையீட்டினை சமர்ப்பிக்க கவனத்திற் கொள்ளவும்.
- தகவலுக்காக உருவாக்கப்பட்டகோரிக்கையை மறுப்பது
- பிரிவு 5 இன் கீழ் தகவல்கள் விலக்கு அளிக்கப்படுகின்றன என்ற அடிப்படையில் அத்தகைய தகவல்களை வழங்கப்படுவதிலிருந்து மறுப்புத் தெரிவித்தல்.
- இந்த சட்டத்தினால் குறிப்பிடப்பட்ட கால அளவுகளுடன் இணங்காது.
- முழுமையற்ற பொய்யான அல்லது தவறான தகவல்களை வழங்குதல்.
- அதிக கட்டணம் வசூலித்தல்.
- கோரப்பட்ட படிவத்தில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் அதிகாரியின் மறுப்பு.
- தகவல் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு அல்லது தவறாக இடம்பிடித்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்ளைக் கோரும் பிரஜைக்கு அத்தகைய தகவல்களை அணுகுவதைத் தடுத்தல்.
நியமிக்கப்பட்ட அதிகாரி
திருமதி. டீ.எம்.ஏ. திசாநாயக
பிரதேச செயலாளர்
தொலைபேசி : +94 662 056 534
தொலைநகல் : +94 662 055 087
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பப்படிவங்கள்
- தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கவும் - நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடல்



















