எமது நோக்கு
“இரத்தோட்டை பிரதேசத்திற்கான நிலையான அபிவிருத்தி”
எமது பணிக்கூற்று
“அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க சேவைகளை வழங்குதல், வளங்களின் ஒருங்கிணைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பினூடான செயற்றிறன்மிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயன்முறை மூலம் பிரதேச வாழ் மக்களின் வாழ்வினை மேலோங்க செய்தல்”
இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவானது வடக்கே 7.25-7.33 நெட்டாங்கும் கிழக்கே 80.36-80.45 அகலாங்கிற்கும் இடையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000-5000 அடி உயரம் கொண்டமைந்துள்ளது. பெரும்பாலும் இப்பிரதேசம் மலைகள், குன்றுகள், சென்றடைய கடுமையான இடங்ளைக் கொண்டதுடன் இப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளின் எல்லைகளாவன உன்னஸ்கிரிய மலை மற்றும் உலக பாரம்பரியமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நக்லஸ் பாதுகாப்பு வலயம் ஆகியவற்றினால் சூழப்பட்டுள்ளது. இலங்கை புவிச்சரிதவியல் மதிப்பாய்வு குறித்த புவியியலாளர்களின் கருத்தின் படி, மாத்தளை மாவட்டத்தின் மலைத்தொடர்களாவன புவியோட்டின் மடிவு பாறைப்பகுதி, எதிர்ச்சாய்வு மடிப்பு, அமுக்கவிசை, சாய்வு ஆகியவற்றின் பெறுபேறுகளாகும். இப்பிரதேசத்தில் மடிவுப் பாறைப் பகுதிக்கான ஒரு எடுத்துக்காட்டாக நக்லஸ் மலைத்தொடரினை அறிமுகப்படுத்த முடியும். இரத்தோட்டை பிரதேசத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாரிய கீழ்நோக்கிய சரிவின் காரணமாக மண்ணரிப்பு செயல்முறையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. புவி மேற்பரப்பிற்கு வெளிப்படும் திண்ம படையில் ஏற்படுகின்ற சில சாய்வு பகுதிகள் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுக்கின்றன.
இப்பிரதேசமானது அதிகளவிலான மழைவீழ்ச்சியைப் பெறுவதுடன் வருடாந்த மழைவீழ்ச்சியானது 1000mm-2500mm ஆகும். இப்பிரதேசம் 24-30 பாகை செல்சியஸ் அளவிலான மிதமான வெப்பநிலை கொண்டதாகும்.கோப்பி,தேயிலை, மிளகு போன்ற பொருளாதார பயிர்ச்செய்கைகளுக்கு இது பொருத்தமான காலநிலையாகும்.
இப்பிரதேசத்தில் மூன்று சூழல் வலயங்ளை அடையாளப்படுத்த முடியும்.
1. மலைநாட்டு இடைவலய மத்திய வலயம்
2. மத்திய நாட்டு ஈரவலயம்
3. மத்திய நாட்டு இடை வலயம்
இப்பிரதேசத்தில் நீரினைத் தாங்கிய சில நீரோடைகளை காணமுடியும். நக்லஸ் மற்றும் உன்னஸ்கிரியவிலிருந்து ஆரம்பிக்கின்ற தெலிவல ஓயா, தன்கந்த ஓயா, மொரகல ஓயா, நிக்கலோயா போன்ற சிறிய நீர் வளங்கள் இப்பிரதேசத்தினூடாக பாய்ந்து சுதுகங்கையுடன் இணைகின்றன.
இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவானது மூன்று விவசாய காலநிலை வலயங்களை கொண்டது. அவை, இடைவலய மத்திய வலயம், மத்திய நாட்டு ஈரவலயம் மற்றும் மத்திய நாட்டு இடை மத்திய வலயம் ஆகும். வருடாந்த மழைவீழ்ச்சியானது 1000mm-2500mm ஆகும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 2500mm கிடைக்கின்றது.
நக்லஸ் பாதுகாப்பு வலயத்தில் பசுமையான காடுகள், சமவெளி ஆகியவற்றை இனங்காண முடியும். மடவத்த, தன்கந்த, பொல்வத்தகந்த, வெரலுகஸ்தன, நிக்கலோயா, கபரகல போன்ற பிரதேசங்களில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் 380 ஹெக்டரில் பைனஸ்(Pinus), நீலகிரி கற்பூரத்தைலம்(Eucaliptus), மரஎண்ணெய்(Turpentine) போன்ற விதேசிய வனவளர்ப்பு தோட்டம் வளர்க்கப்பட்டுள்ளது.
நாம் இப்பிரதேசத்தின் மண் பிரிதழித்தலை கவனத்திற்கொள்ளும் போது பெரும்பாலும் மாத்தளை மாவட்டத்தில் அடையாளங்காணப்பட்ட செங்கபில மண்ணை இரத்தோட்டை பிரதேசத்திலும் காண முடியும். காலநிலை வலயங்களின் படி இப்பிரதேசத்தில் விஷேட மண் வகைகளை அடையாளப்படுத்த முடியும்.
- மத்திய நாட்டு ஈரவலயம் /செங்கபில லற்றசோலிக் மண்/இளஞ்சிவப்பு லற்றசோலிக் மண்
- மலைநாட்டு இடைவலய மத்திய வலயம்/ செங்கபில லற்றசோலிக் மண்/ மலைநாட்டு வன் பாறை
- இடைவலய மத்திய வலயம்/ செங்கபில லற்றசோலிக் மண்/ இளஞ்சிவப்பு லோம் மண்
காலநிலை
இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவானது மூன்று காலநிலை வலயங்களை கொண்டது. அவை மலைநாட்டு இடை மத்திய வலயம் (IM 3a) , மத்திய நாட்டு ஈரவலயம்(WM 3b) மற்றும் மத்திய நாட்டு இடை மத்திய வலயம். வருடாந்த மழைவீழ்ச்சியானது 1000mm-2500mmற்கும் இடைப்பட்டது. அதிகூடிய மழைவீழ்ச்சியான 2500mm டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கிடைக்கின்றது. ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. இப்பிரதேசத்தில் மழைவீழ்ச்சியானது பிரதானமாக வடகிழக்கு பருவக்காற்று காலப்பகுதியிலும் குறைவாக தென்மேற்கு பருவக்காற்று காலப்பகுதியிலும் கிடைக்கின்றது. சராசரி வெப்பநிலையானது 24-30 பாகை செல்சியஸ் ஆகும். இங்கு அதிக வெப்பமான மாதம் ஆகஸ்ட் என்பதோடு ஜனவரி மாதம் மிகவும் குளிரான காலமாகும்.
பிரதேச நிர்வாகம்
1815ம் ஆண்டு இலங்கை காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டபோது இரத்தோட்டை பிரதேசமானது கந்த உடரட்ட ஆட்சிமுறைக்குள் உள்வாங்கப்பட்டது. அதன் பிறகு 1955ம் ஆண்டு மாத்தளை தனி மாவட்டமாக மாற்றப்பட்டதும் இரத்தோட்டை பிரதேசமானது மாத்தளை உதவி அரச முகவர் பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் அதிகரிக்கின்ற நிர்வாக நடவடிக்கைகளை திறம்படசெய்வதற்காக மாத்தளை மாவட்டமானது மூன்று வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இரத்தோட்டையானது அதன் தென்பகுதியை சேர்ந்தது. 1963ம் ஆண்டிற்கு பின்னர் பிரதேசங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டதுடன் இரத்தோட்டை பிரதேசமானது தனியொரு பிரிவாக பரிந்துரைக்கப்பட்டது. இதன் பெயரானது பிரதேச அரச முகவர் பிரிவு என மாற்றியமைக்கப்பட்டது.
1963ல் கிராமத்தலைவர் பதவி முறையானது மாற்றிமைக்கப்பட்டதன் பின்னர் கிராம உத்தியோகத்தர் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டது. இது 54 கிராமசேவக பிரிவுகளைக் கொண்ட பிரதேச செயலகமாக மாற்றியமைக்கப்பட்டது. இரத்தோட்டை பிரதேசமானது மாத்தளை நகரிற்கு அருகில் அமைந்துள்ளதுடன் குடியிருப்புக்களுக்கு பொருத்தமான காலநிலையை கொண்டுள்ளமையால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பிரதேசமாக மாறியது.
இரத்தோட்டை பிரதேச செயலக பிரிவானது முழுமையாக இரத்தோட்டை பிரதேச சபை பகுதிக்கு சொந்தமானது. மேலும் இரத்தோட்டை பிரதேச சபையானது இப்பகுதியில் பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான மேம்பாட்டு நடவடிக்கைகள் இந்த நிறுவனத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. பழைய கம்சபா முறைக்கு பதிலாக 80ம் தசாப்தங்களில் இந்த பிரதேச சபையானது அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பிரதேச சபையானது இப் பிரதேசத்தில் உள்ள மக்களின் வாக்குகளினால் தேர்வு செய்யப்படுகின்ற 12 உறுப்பினர்களைக் கொண்டு காணப்படுகின்றது. இந்த பிரதேச சபை முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் 70-80 தசாப்தங்களில் இரத்தோட்டை நகரமானது நகரசபையுடன் தொடர்புபட்டிருந்தது.
இரத்தோட்டை பிரதேச செயலக பிரிவானது 54 கிராமசேவக பிரிவுகளைக் கொண்டதுடன் மொத்த சனத்தொகையானது 60464 ஆகும்.
மாத்தளை மாவட்டமானது பாரியளவு உற்பத்தி மற்றும் சிறு ஏற்றுமதி உற்பத்தி விளைச்சல்களான இலவங்கப்பட்டை, மிளகு, கோப்பி போன்றவற்றை இரத்தோட்டை பிரதேசத்திலிருந்தே பெற்றுக்கொண்டது. இப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் தென் பகுதி எல்லைகளில் ஏலக்காய் பயிர்ச்செய்கையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது. ஏலக்காய் பயிர்ச்செய்கையின் அதிகரிப்பிற்கு பிரதான காரணமானது கடந்த இரு தசாப்தங்களாக ஏலக்காய் விளைச்சலுக்கான அதிகபட்ச விலையினை பெற்றுக்கொள்வதாகும். இப்பிரதேச மக்கள் இதுபோன்ற உயர்தர பொருளாதார பயிர்களை விநியோகிப்பதன் காரணமாக அதிக வருமானத்தைப் பெறுகின்றனர்.
இப்பிரதேசத்தின் வணிக நகரம் இரத்தோட்டை என்றாலும் இப்பகுதி மக்கள் தங்களின் தேவைப்பாடுகளை மாத்தளை நகரத்திலிருந்தே பூர்த்திசெய்கின்றனர். கடினமான ஆனால் அழகிய பகுதிகளான லக்கல மற்றும் வில்கமுவ ஆகியவற்றை இணைக்கும் இல்லுக்கும்பர பாதை இந்த பிரதேசத்தினூடாகவே செல்கின்றது.
இரத்தோட்டை பிரதேசத்தில் பெரும்பாலானவர்கள் சிங்கள பௌத்த மக்களாவர். அவர்கள் மாத்தளை நகரப் பகுதியில் தனியார் மற்றும் அரச பிரிவுகளில் தொழில்களில் ஈடுபடுகின்றனர். இந்திய வம்ச தமிழ் மக்கள் தோட்டப்புற பகுதியில் இணைந்து வாழ்கின்றனர். ஆகையால் இந்துகோயில்களை தோட்டப்புறங்களில் காண முடியும். பெரும்பாலும், இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் வகையில் ஒரு தொலைத்தொடர்பு கோபுரமானது ரிவர்ஸ்டன் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளின் இயற்கை எழிலானது சுற்றுலாத்துறையின் சுவர்தாங்கியாக காணப்படுகின்றன.



















